ரிம2.6பில்லியன் நன்கொடை : நாடாளுமன்றத்தின் இறுதி நாளில் விளக்கமளிப்பு

azalinaபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்கில்  செலுத்தப்பட்டதாகக்  கூறப்படும்  ரிம 2.6பில்லியன்  தொடர்பான  கேள்விகளுக்கு  நஜிப்  அல்லது  அவரால்  நியமிக்கப்படும்  அமைச்சர்  டிசம்பர் 3-ஆம் தேதி  பதிலளிப்பார்.

நடப்பு  மக்களவை  அமர்வின்  இறுதி நாளில்  கேள்வி-நேரத்தின்போது  அவற்றுக்கு  விளக்கமளிக்கப்படும்  என பிரதமர் துறை அமைச்சர் அஸலினா ஒத்மான்  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  ஒரு  கேள்வி  கேட்கப்பட்டால்  அன்றே  அதற்குப்  பதிலளிக்க வேண்டும்  என்பதில்லை  என  அஸலினா  கூறினார்.

“பிரதமர்  இன்று  பதிலளித்தால்  கேள்விகள்  தொடர்ந்து  கேட்கப்படும். அதனால்  எல்லாக்  கேள்விகளையும்  ஒன்றுதிரட்டி பதிலளிப்பது  நல்லதல்லவா?”, என்றவர்  வினவினார்.

பிரதமரே  பதிலளிப்பாரா  என்று  கேட்டதற்கு  அவரால்  பதில் சொல்ல  முடியவில்லை.

“இதற்கு  எப்படி  நான்  பதில்  சொல்ல  முடியும்? நான்  பிரதமர்  அல்லவே”, என்றார்.