ஹாடி அம்னோவுடன் சேர்ந்து சிலாங்கூரில் அரசாங்கம் அமைக்க முயன்றாராம்

hadiபாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  அம்னோவுடன்  சேர்ந்து  சிலாங்கூரில்  ஒற்றுமை  அரசு  அமைக்க  முயன்றார்  என பாஸின்  முன்னாள்  உதவித்  தலைவர்  ஹுசாம்  மூசா  கூறினார்.

அது  எப்போது  என்பதை  அந்த  சாலோர்  சட்டமன்ற  உறுப்பினர்  தெரிவிக்கவில்லை  என்றாலும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  வெளியேற்றப்பட்டபோது  அது  நிகழ்ந்திருக்கலாம்  என  நம்பப்படுகிறது.

“பிகேஆர்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  இருவர்  அல்லது  மூவரை  பாஸில்  சேர்த்துக்கொண்டு  அம்னோவுடன்  இணைந்து  சிலாங்கூரில்  மாநில  அரசை  அமைக்க  முயன்றதைத்  தலைவரே  ஒப்புக்கொண்டிருக்கிறார்.

“அது பற்றி  வினவப்பட்டபோது  அவர்  வெளிப்படையாகவே  ஒப்புக்கொண்டார். இப்போது  நான்  இதை வெளியில்  சொன்னதற்காக  அவர்  என்மீது  கோபமுற்றாலும்  கவலையில்லை”, என  ஹுசாம் கூறினார்.