மஇகா தேர்தல்: வாக்களிப்பு முடிவடைந்து வாக்குகள் எண்ணப்படுகின்றன

micமஇகா உயர்பதவிகளுக்கான மறுதேர்தலில்  வாக்களிப்பு  முடிவடைந்து  வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

முடிவுகள்  விரைவில்  தெரியவரும்.

ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் எம்.சரவணனும்  பேரா மாநில சட்டமன்றத்  தலைவர்  எஸ்.கே தேவமணியும் போட்டியிடுகின்றனர்.

3 உதவித் தலைவர் பதவிகளுக்கு முன்னாள்  இளைஞர்  தலைவர்கள்  டி.மோகன், எஸ்.ஏ. விக்னேஸ்வரன்,  தகவல் பிரிவுத்  தலைவர் வி.எஸ், மோகன்,  முன்னாள்  தலைமைப்  பொருளாளர்  ஜஸ்பால்  சிங்  ஆகியோர்  போட்டியிடுகின்றனர்.

23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளுக்கு 44 பேர் போட்டியிடுகின்றனர்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  பிற்பகல்  மணி 3-க்கு  பொதுப்  பேரவையில்  கலந்துகொள்வார்  என  எதிர்பார்க்கப்படுகிறது.