அருள் 1எம்டிபி பற்றி அம்னோவுக்கு விளக்கமளிப்பார்: எதிரணியினருக்கும் அழைப்பு

brief1எம்டிபி  தலைவரும்  தலைமை  செயல்  அதிகாரியுமான  அருள்   கந்தா  கந்தசாமி   1எம்டிபியைச்  சூழ்ந்துள்ள  விவகாரங்கள்  பற்றி  அம்னோவுக்கு  விளக்கமளிப்பார்.

‘பிரதான  விளக்கமளிப்புக்  கூட்டம்’  என்று  வருணிக்கப்பட்டுள்ள  அந்நிகழ்வை அம்னோ  தகவல்  பிரிவு  ஏற்பாடு  செய்துள்ளது. அது  நவம்பர்  14-இல் புத்ரா உலக  வாணிக  மையத்தில்  நடைபெறவுள்ளது.

அதில்  நாடு  முழுவதிலுமிருந்து  191  தொகுதித்  தலைவர்களும்  ஆயிரம்  என்ஜிஓ  பேராளர்களும்  கலந்து கொள்வார்கள்  என  பெர்னாமா  கூறியது.

அக்கூட்டத்தில்  1எம்டிபி  தவிர்த்து  பட்ஜெட்  2016,  பசிபிக்  பங்காளித்துவ ஒப்பந்தம்(டிபிபிஏ)  ஆகியவை பற்றியும்  விளககமளிக்கப்படும்  என  அம்னோ  தகவல்  தலைவர்  அஹ்மட்  மஸ்லான்  தெரிவித்தார்.

கூட்டம்  காலை  மணி  8.15க்கு தொடங்கும்  என்று  கூறிய  மஸ்லான்  எதிரணியினரும்  வரலாம்  என்றார்.