பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்கில் செலுத்தப்பட்ட ரிம2.6 பில்லியன் நன்கொடைக்கும் 1எம்டிபி-க்கும் தொடர்பில்லை எனப் பொதுக் கணக்குக்குழுத் தலைவர் ஹசான் அரிபின் கூறினார்.
“1எம்டிபி, ரிம2.6 பில்லியன் ஆகிய இரண்டுமே வெவ்வேறான விசயங்கள்”, என ஹசான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என வினவியதற்கு, தலைமைக் கணக்காய்வாளரின் இடைக்கால அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
முன்பு தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங்கிடம் இது பற்றி வினவியபோது ரிம2.6பில்லியன் எப்படி வந்தது என்று ஆராயப்போவதில்லை என்றும் அதை பேங்க் நெகாராவிடம் விட்டு விடுவதாகவும் கூறியிருந்தார்.
குறள் 871
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது.
வாழ்க நாராயண நாமம்.
தொடர்பில்லை! ஒட்டி உறவாடிய பின் கதை இருக்கு என்று வெளி நாடு வரை தெரிந்துள்ளது. மாமக்தீருக்கு தெரிந்திருக்கு. முன்னாள் அரசாங்க தலைமை அதிகாரிக்கு தெரிந்திருக்கு. இந்த வெங்காயத்திர்க்குத் தெரியவில்லை. யாருக்கு எது வேணுமோ அதுதானே கண்ணுக்குத் தெரியும்.
ஜிம்னாஸ்டிக் அடிப்பதில் உலக ஜிம்னாஸ்டிக் வீரர்களையும் மிஞ்சிவிட்ட நேர்மையான வீரர் .
one eye jack is the king of the land of blind.
முட்டாள்களாக இருக்கும் குடி மக்கள் இடையே முட்டாள் அறிவாளிகளும் உண்டு போலும்..
!
மனசாட்சி மறைந்து போய் நாட்கள் பல ஆயின இந்த நாட்டில்.
பொய்யர்கள் கூட்டம் அதிகரித்து போனது இவன் ஆட்சியிலே.
நாட்டை மீட்பதற்கு நாதிகூட இல்ல இங்க இப்போது
நாமெல்லாம் ஏங்க வேண்டியதுதான் நீதிக்கு வழியின்றி
அப்படியானால் ரிம2.6 பில்லியனுக்கும்-சோமாலியா கடற் கொள்ளையர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையை விரிவு படுத்தலாமே 1
எப்படி எல்லாம் குட்டையைக் குழப்புகின்றார்கள் பாருங்கள். இவனைக் கேட்டால் அவன். அவைனைக் கேட்டால் இவன் என்று நாடகம். நன்கொடை பணம் எப்படியெல்லாம் சுற்றி வந்ததோ, அதைப் போல இவர்களும் மக்களை சுற்றலில் விடுகின்றார்கள். நல்லா பம்பரம் விளையாடத் தெரிந்தவர்தான் தலைவர்!
இதை சொல்ல உனக்கு என்ன கொடுத்தார்கள் அல்லது எவ்வளவு கொடுதார்கள்