டிஏபி: செய்தியாளர்களைக் கண்டு அஞ்சும் ஹசான் பிஏசி தலைவராக இருக்கத் தகுதியற்றவர்

kitரொம்பின்  எம்பி  ஹசான்  அரிபின்  இனி  செய்தியாளர்  கூட்டங்கள்  நடத்தப்போவதில்லை  என்று  அறிவித்திருப்பது  பொதுக் கணக்குக்குழு  தலைவர்  பதவிக்கு  அவர்  தகுதியானவர்தானா  என்ற  பலத்த  சந்தேகத்தை  உண்டுபண்ணியுள்ளதாக  டிஏபி  கூறுகிறது.
ஹசான்  செய்தியாளர்  கூட்டங்களுக்கு  முற்றிலும்  தடை  விதிக்கும்  அளவுக்கு  செய்தியாளர்களைக்  கண்டு  அஞ்சுவதைப்  பார்க்கையில்  அரசாங்கக் கணக்குவழக்குகளைக்  கண்காணிப்பதில்  பொறுப்புடனும்  நேர்மையுடனும்  அவரால் செயல்பட  முடியுமா  என்ற  கேள்வி  எழுவதாக  கேளாங்  பாத்தா  எம்பி  லிம்  கிட்  சியாங்  கூறினார்.

“உலக  முழுவதிலும்  பொதுக்  கணக்குக்குழுக்கள்,  அனைவரும்  பார்க்க  அவற்றின் கூட்டங்களை  நடத்துகின்றன. ஆனால்,  மலேசியாவிலோ  பிஏசி  கமுக்கமாக  செயல்படுகிறது  பிஏசி  தலைவரோ  செய்தியாளர்களை  மீதுள்ள  வெறுப்பால்  செய்தியாளர்  கூட்டங்களையே  தடை  செய்திருக்கிறார்”, என  லிம்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.