முகைதின் யாசினின் “பொதுக்கூட்டத்தில்” மகாதிருடன் 1000 க்கு மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்

 

 நாளை அம்னோ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக இன்றிரவு கோலாலம்பூர் கம்போங் பாரு சுல்தான் சுலைமான் கிளப்பில் முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோ துணைத் தலைவருமான முகைதின் யாசின் உரையாற்றும் (முகைதின் யாசின் பொதுக்கூட்டம்) கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகாதிர் உட்பட 1000 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இரவு மணி 8.30 அளவில் முன்னாள் பிரதமர் மகாதிருடன் முகைதின் யாசின் சுல்தான் சுலைமான் கிளப் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அவர்களுடன் அம்னோ உதவித் தலைவர் ஷாப்பி அப்டாலும் இருந்தார்.

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் மண்டபத்தில் இருந்தனர். சுமார் 300 பேர் மண்டபத்திற்கு வெளியில் நின்றுகொண்டு பெரிய திரையின் வழி பேச்சுகளைக் கேட்டனர்.

தேசிய கீதம் மற்றும் அம்னோ பாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கிற்று.