பாக்சைட் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதற்கு என்ஜிஓ பாராட்டு

maroபாக்சைட்  தூய்மைக்கேட்டை  நிறுத்தும்  மக்கள்  இயக்கம் (கிராம்),  பகாங்கில்  ஜனவரி  15 தொடங்கி  மூன்று மாதங்களுக்கு  பாக்சைட்  சுரங்க  நடவடிக்கைகள்  நிறுத்தி  வைத்திருப்பதற்காக  அரசாங்கத்தைப்  பாராட்டியுள்ளது.

தூய்மைக்கேட்டுப்  பிரச்னையைத்  தடுப்பதற்குப் பல்வேறு  முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு  பலனளிக்காத  நிலையில் இப்படி  ஒரு  நடவடிக்கை  எடுக்கப்பட்டிருப்பதை  கிராம்  தலைவர்  அலி  அக்பர் ஒத்மான் வரவேற்றார். அது  சரியான  நேரத்தில்  எடுக்கப்பட்ட  ஒரு  நடவடிக்கை  என்றாரவர்.