விடுமுறை முடிந்து நாடு திரும்பினார் முகைதின்

muhidinடுபாயில்  இரண்டு-வார விடுமுறையைக்  கழித்து  விட்டு  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  நாடு  திரும்பினார். நாடு  திரும்பிய  அவர்  அம்னோ  அரசியல்  பற்றியோ  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பற்றியோ கருத்துரைக்க  விரும்பவில்லை.

“அரசியல்  பற்றிப்  பேச  விரும்பவில்லை. திரும்பி  வந்ததில்  மகிழ்ச்சி”,  என்று  மட்டும்  கேஎல்  அனைத்துலக  விமான  நிலையத்தில்  சந்தித்த  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

கடந்த  மாத  அம்னோ  பேரவையில்  கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குத்தான்  முழு  ஆதரவு  இருப்பதுபோல்  தெரிந்ததே  அப்படியென்றால்  கட்சியில்  மாற்றுக்  கருத்துக்  கொண்டோருக்கு  இடமில்லையா  என்று  அவரிடம்  வினவப்பட்டது.

“இல்லை. கருத்துரைக்க  விரும்பவில்லை. புத்தாண்டு  வாழ்த்துகள்”, என்று  சொல்லி நகர்ந்து  விட்டார்.