அமானா: நாங்கள் பதவிவெறி பிடித்தவர்கள் அல்ல

positionஅமானா  கட்சியினருக்குப்  பதவி  ஆசை  கிடையாது. இருந்திருந்தால்  அவர்கள்  பாஸ்  கட்சியிலேயே  இருந்திருப்பார்கள்  அல்லது  அம்னோவில்  சேர்ந்திருப்பார்கள்  என  பார்டி  அமானா  நெகாரா  தொடர்பு இயக்குனர்  காலிட்  சமாட்  கூறினார்.

பாஸிலிருந்து  பிரிந்து  வந்தபோதே  பதவிகளை  இழக்க  நேரும்  என்பதை  அறிந்தே  இருந்ததாக  அவர்  சொன்னார்.

“ஆனாலும்  பாஸிலிருந்து  விலக  துணிந்தோம்…….எனவே, அமானா  ஆத்திரம்  கொண்டிருப்பதாகக்  கூறுவது  சரியல்ல”, என்றாரவர்.

சிலாங்கூர்  ஊராட்சி  மன்றங்களில்  அமானாவுக்கு  ஒதுக்கப்பட்ட இடங்களின்  எண்ணிக்கை  தொடர்பில்  அதிருப்தி  நிலவுவதாகக்  கூறப்படுவது  பற்றிக்  கருத்துரைத்தபோது  காலிட்  இவ்வாறு  கூறினார்.