பிஜே பல்கலைக்கழகமொன்றில் வெடிகுண்டு அச்சம்

bombபெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  ஒரு  பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு  வைக்கப்பட்டிருக்கலாம்  என்ற  அச்சத்தின்  காரணமாக  பணியாளர்களும்  மாணவர்களும்  பல்கலைக்கழக  வளாகத்திலிருந்து  அப்புறப்படுத்தப்பட்டனர்.

வெடிகுண்டு  செயலிழப்புப்  பிரிவினர்  பல்கலைக்கழக  முழுவதும்  சோதனை  செய்து  வருவதாக  போலீஸ்  வட்டாரம்  ஒன்று  தெரிவித்தது.

பல்கலைக்கழகத்தில்  கவனிப்பாரின்றி  காணப்பட்ட  பை ஒன்றுதான்  வெடிகுண்டு  வைக்கப்பட்டிருக்கலாம்  என்ற  அச்சத்தைத்  தோற்றுவித்தது  என  அவ்வட்டாரம்  தெரிவித்தது.

கடந்த  வாரம்  ஜகார்த்தாவில்   நிகழ்ந்த பயங்கரவாதத்  தாக்குதலைத்  தொடர்ந்து  மலேசியாவில்  பாதுகாப்பு  உச்சக்கட்டத்தில்  வைக்கப்பட்டுள்ளது.