பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக பணியாளர்களும் மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் பல்கலைக்கழக முழுவதும் சோதனை செய்து வருவதாக போலீஸ் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
பல்கலைக்கழகத்தில் கவனிப்பாரின்றி காணப்பட்ட பை ஒன்றுதான் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தைத் தோற்றுவித்தது என அவ்வட்டாரம் தெரிவித்தது.
கடந்த வாரம் ஜகார்த்தாவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மலேசியாவில் பாதுகாப்பு உச்சக்கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற இப்படியெல்லாம் புரளியை கிளப்பி விடலாமா? என்னாம்மா இப்படி பன்றிங்கலேம்மா?
சிறப்பு பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற இப்படியெல்லாம் புரளியை கிளப்பி விடலாமா? என்னாம்மா இப்படி பன்றிங்கலேம்மா?
ஐயா தேனீ! சிறப்பு பாதுகாப்பு சட்ட மசோதா எனப்படும் Majlis Keselamatan Negara {MKN] அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதன் சாராம்சம் இவையே: 1.Abai Hak Autonomi Sabah ,Sarawak . 2. [Najib] Ambil Alih 4 Cabang Kuasa 3.PM Boleh Ishthiyar Darurat 4. Tangkapan Tanpa Waran .
ஐயா சிங்கம் அவர்களே, ரௌடி போலிஸ் இணையத் தளத்தைச் சுற்றி வந்து கொண்டிருகின்றது. வார்த்தைகள் கவனம்.
இனி மேல் நாமெல்லாம் வெடிகுண்டு பயத்தில் தான் வாழ வேண்டுமோ?
இது நஜிப் பின் இன்னொரு விளையாட்டு மக்களை 1 MDB பிரச்சனயிளிரிந்து திசை திருப்ப விளையாடுகிறான் ஆனால் மக்கள் தெளிவாகத்தான் உள்ளனர் .