சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்தது

floodsசரவாக்கில்  நேற்றிரவு  5,769 ஆக  இருந்த  வெள்ள  அகதிகளின்  எண்ணிக்கை  இன்று  7,931 ஆக  உயர்ந்துள்ளது.

துயர்த்துடைப்பு  மையங்களின்  எண்ணிக்கையும்  31-இலிருந்து  47 ஆக  உயர்ந்திருப்பதாக  சரசாக்   சிவில்  தற்காப்பு  அதிகாரி  சித்தி  ஹுஸைமா  இப்ராகிம்  தெரிவித்தார்.

கூச்சிங்கில்  நேற்றிரவு  8 துயர்த்துடைப்பு  மையங்கள்  இருந்த  இடத்தில்  இப்போது  24  மையங்கள்  செயல்படுகின்றன.

கடந்த  மூன்று  நாள்களுடன்  ஒப்பிடும்போது  வானிலை  இன்று  காலை  சற்று  மேம்பட்டிருப்பதாக  சித்தி  ஹுஸைமா  கூறினார்.

-பெர்னாமா