கோலாலும்பூரில் புதிய தங்குவிடுதிகள் கட்டப்படாது

mayorஅளவுக்கு  அதிகமாக  தங்குவிடுதிகள்  இருப்பதால்  புதிய  தங்குவிடுதிகள்  கட்டுவதற்கு  அனுமதி  அளிப்பதை  கோலாலும்பூர்  மாநகர்  ஆட்சி  மன்றம்  நிறுத்தி  வைத்துள்ளது.

கூட்டரசு  அரசாங்கத்துடன்  கலந்து  ஆலோசித்த  பின்னர்  இம்முடிவு  எடுக்கப்பட்டதாக  கோலாலும்பூர்  மேயர்  முகம்மட்  அமின்  நோர்டின்  அப்துல்  அசீஸ்  த  ஸ்டார்  நாளேட்டிடம்  தெரிவித்தார்.

கோலாலும்பூரில்  400 பட்ஜெட்  ஹோட்டல்கள்  உள்பட  939  தங்குவிடுதிகள்  உள்ளன.