‘திரெங்கானு அம்னோவில் நெருக்கடி’, முன்னாள் எம்பி

exmbதிரெங்கானு  மந்திரி  புசார்  அஹ்மட்  ரசிப்  அப்துல்  ரஹ்மான் எந்த  நேரத்திலும்   பதவியிலிருந்து  தூக்கப்படலாம்  என  முன்னாள்  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்  கூறிக்  கொண்டிருக்கிறார்.

திரெங்கானு  சுல்தான்   மிசான்  சைனல்  அபிடினைச்  சந்தித்து  மந்திரி  புசாரை  அகற்றுமாறு  அவரைக்  கேட்டுக்கொள்ள  வேண்டும்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  தாம்   வேண்டுகோள்  வைத்திருப்பதாக  அந்த  கிஜால்  சட்டமன்ற  உறுப்பினர்  தெரிவித்தார்.

சுல்தான்  மிசான்  வெளிநாடு  சென்றிருப்பதால்  அவர்  திரும்பி  வந்ததும்  அவரைச்  சந்திப்பதற்கு  ஏற்பாடு  செய்யப்படும்  என அஹ்மட்டை  மேற்கோள்காட்டி  சினார்  ஹரியான்  கூறியது.

“அவருடைய (அஹம்ட் ரசிப்) வண்டவாளங்கள்  எல்லாம்  எனக்குத்  தெரியும். சரியான  நேரம்  வரட்டும்.  அவிழ்த்து  விடுவேன்”, என்றாரவர்.