1எம்டிபி-இன் அபராதத் தொகை வெளியில் தெரிவிக்கப்படாது

bnmவிதிமுறைகளை  மீறியதற்காக  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  1எம்டிபிக்கு  விதிக்கப்பட்ட  அபராதத்  தொகையை  பேங்க்  நெகாரா  வெளியிடாது.

பேங்க்  நெகரா  தனிப்பட்டவர்களுக்கு  அல்லது  நிறுவனங்களுக்கு  விதிக்கும்  அபராதத்  தொகையை  வெளியில்  சொல்வதில்லை  என  பேங்க்  நெகாராவின்  புதிய  ஆளுனர்  முகம்மட்  இப்ராகிம் இன்று  கூறினார்.

“அபராதத்  தொகைகளின்  மொத்த  கணக்கு  மட்டுமே  வெளியிடப்படும்.  அதை  எங்களின்  நிதி  அறிக்கையைப்  பார்த்துத்  தெரிந்து  கொள்ளலாம்.

“வெளிநாட்டில்  உள்ள பணத்தை  மலேசியாவுக்குத்  திருப்பி  அனுப்பத்  தவறியதற்காக  1எம்டிபிக்கு  அபராதம்  விதிக்கப்பட்டது”, என்று  பேங்க்  நெகாராவில்  தமது  முதலாவது  செய்தியாளர்  கூட்டத்தில்  அவர்  சொன்னார்.