எதிர்வரும் இரு இடைத் தேர்தல்களிலும் பக்கத்தான் ஹரப்பான் உறுப்பு கட்சிகளிடையே மோதல்கள் இல்லாதிருப்பதை பார்டி அமனா நெகாரா (அமனா) உறுதி செய்யும்.
கோலகங்சார் மற்றும் சுங்கை புசார் தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் பாரிசான் நேசனலை தோற்கடிக்க எதிரணியினர் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டின் வலியுறுத்தலுக்கு எதிர்வினையாற்றிய அமனா தலைவர் முகமட் சாபு இவ்வாறு கூறினார்.
இந்த இடைத்தேர்தலில் அமானாவை தவிர, டி.எ.பி.யோ அல்லது பி. கே.ஆரோ அம்னோவை எதிர்த்து போட்டியிடாது. நமது பொதுவான எதிரி அம்னோ. சென்ற பொதுத்தேர்தலில் அம்னோவை எதிர்த்து நின்ற பாஸ் கட்சி வெறும் சொற்ப வாக்குகளில் மட்டுமே தோல்விகண்டது. ஆக, பாஸ் கட்சிக்கு அமானா விட்டுக்கொடுத்து, நமது பொதுவான எதிரிக்கு கடும் போட்டியை கொடுக்க முயல்வதே நல்லது. இதில் பாஸ் கட்சி வெற்றி பெற்றால், அம்னோவும், பாஸ் கட்சியும் பெரும் விரோதிகளாகிக் கொள்ள வழி ஏற்படும். பாஸ் கட்சி தோல்வியுற்றால், இதோடு அதற்கு சமாதி கட்ட வாய்ப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு, பக்காத்தான் இப்போட்டியில் இருந்து சற்று விலகி இருப்பதே நல்லது.
இடைதேர்த்தலில் சரி.. அடுத்து வர போகும் 14வது தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் நிற்கும் தொகுதிகளில் பாஸ் கட்சி விட்டு கொடுக்குமா? பாஸ் இப்போது அம்னோவின் கையால். இதெல்லாம் வெறும் கண் துடைப்பு..
பாஸ் இன வெறி பிடித்த கட்சி எப்படி நம்புவது!இனம் இனத்தோடுதான் சேரும் என்று பாஸ் பல வேளைகளில் நிருபித்துள்ளது…காலஞ்சென்ற தொ குரு நிக் அஜீஸ் கட்சியை கட்டு கோப்புடன் வைத்திருந்தது போல் இன்று இல்லை ஆக… பகாதான் தீர யோசித்து முடிவெடுத்தால் நன்று
//இரு இடைத் தேர்தர்களிலும் ஹரப்பான் மோதல்கள் இல்லாதிருப்பதை அமனா உறுதி செய்யும்//
அப்படியே எதிர்கட்சி சார்பாய் நிற்பவர், ஆளும்கட்சியின் சில பல சலுகைகளுக்கு வாலாட்டி இறுதி நேரத்தில் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்று ஆளும்கட்சிக்கு வெற்றியை பரிசளித்து விடாமல் இருக்கவும், ஜெயித்த பின்பு பாரிசானில் இணைவதாகக் கூறி எதிர்கட்சிகளின் ஆசையில் மண்ணைப் போட்டு விடாமல் இருக்கவும், தாங்கள் ஆதரிக்கும் அந்த வேட்பாளர்களிடம் அதையெல்லாம் செய்யக்கூடாது என ஓர் உடன்படிக்கை செய்துகொள்ளுங்கள் என்று மக்கள் வின்ணப்பிக்கவேன்டும்.
பாஸ் போட்டியிடுவதும் இல்லாததும் ஒன்றுதான்.அப்படியே போட்டியிட்டாலும் அது அம்னோவுக்கு சாதகமே.இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.அமானா அல்லது மக்கள் நீதி கட்சி போட்டியிட வேண்டும். பாஸ் கட்சியை முடக்குவதற்கு இந்த இடைதேர்தல் ஒரு வழிதளம்.அமானா மற்றும் மக்கள் நீதி கட்சிக்கு அணைத்து மக்கள் ஆதரவும் உண்டு. மலாய் மக்கள் தவிர மற்ற இனத்தவர் ஆதரவு பாஸ் கட்சிக்கு இல்லை.நேரடி போட்டி வேண்டுமானால் பாஸ் கட்சி ஒதுங்கி இருப்பதே நல்லது. அல்லது மீண்டும் மக்கள் ஆதரவு வேண்டும் என்றால் ஒரு தொகுதியை அமானா அல்லது மக்கள் நீதி கட்சிக்கு வழிவிட வேண்டும்.