எல்ஆர்டி பயணிகள் தண்டவாளம் வழியாக நடந்தே சென்றார்கள் அடுத்த நிலையத்துக்கு

lrtஇன்று  காலை  எல்ஆர்டி    சேவையில்   தடை   ஏற்பட்டதால்   நூற்றுக்கணக்கான  பயணிகள்   கோம்பாக்- புத்ரா  ஹைட்ஸ்  நிலையங்களுக்கிடையில்   நடந்தே  செல்ல   வேண்டிய  நிலை  உருவானது.

தண்டவாளங்கள்மீது   நடந்து  சென்றதைப்   பலர்  படங்களுடன்   சமுக  வலைத்தளங்களில்  பதிவு   செய்திருந்தனர்.

காலை  10  மணிக்குப்  பெய்த  கனமழையை  அடுத்து   அப்பகுதியில்   எல்ஆர்டி   சேவை   பாதிக்கப்பட்டது.

அது   இன்று   எல்ஆர்டி  சேவையில்   ஏற்பட்ட  இரண்டாவது   தடை  என்கிறது  பெரித்தா  ஹரியான்.

காலை  மணி  7க்கும்  7.30க்குமிடையிலும்  அந்த  ரயில்  சேவை   தடைப்பட்டது.

“சேவை  தடைப்பட்டதற்கு   வருந்துகிறோம்.  மின்சாரக்  கோளாற்றுக்கான   காரணம்   ஆராயப்பட்டு  வருகிறது”,  என  பிராசரானா   பேச்சாளர்   ஒருவர்   தெரிவித்ததாக   அது  கூறியது.