இன்று காலை எல்ஆர்டி சேவையில் தடை ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் கோம்பாக்- புத்ரா ஹைட்ஸ் நிலையங்களுக்கிடையில் நடந்தே செல்ல வேண்டிய நிலை உருவானது.
தண்டவாளங்கள்மீது நடந்து சென்றதைப் பலர் படங்களுடன் சமுக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.
காலை 10 மணிக்குப் பெய்த கனமழையை அடுத்து அப்பகுதியில் எல்ஆர்டி சேவை பாதிக்கப்பட்டது.
அது இன்று எல்ஆர்டி சேவையில் ஏற்பட்ட இரண்டாவது தடை என்கிறது பெரித்தா ஹரியான்.
காலை மணி 7க்கும் 7.30க்குமிடையிலும் அந்த ரயில் சேவை தடைப்பட்டது.
“சேவை தடைப்பட்டதற்கு வருந்துகிறோம். மின்சாரக் கோளாற்றுக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது”, என பிராசரானா பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாக அது கூறியது.