பகாங் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் அட்னானுக்கு முழு ஆதரவு

adnanமந்திரி  புசார்    அட்னான்   யாக்குபுக்கு  முழு     அதரவு    தெரிவித்துக்கொண்ட   பகாங்கின்   29  பிஎன்  சட்டமன்ற    உறுப்பினர்களும்    அவரே   மாநில    அரசாங்கத்துக்குத்   தொடர்ந்து   தலைமை   தாங்க    வேண்டும்   என்றும்    கேட்டுக்கொண்டனர்.

அட்னானின்   சேவை      இன்னமும்    தேவை    என    தோங்    சட்டமன்ற   உறுப்பினர்    ஷகிருடின்   அப்   மோயின்     கூறினார்.   குறிப்பாக    14வது    பொதுத்     தேர்தலில்    மாநில    தேர்தல்   இயந்திரத்தை    அவர்  வழிநடத்துவது     முக்கியம்    என்றாரவர்.

“ஒற்றுமை   உணர்வுடன்   பகாங்   சட்டமன்ற    உறுப்பினர்   அனைவரும்,    பகாங்   சுல்தான்    அஹ்மட்    ஷாவின்   ஆசியைப்   பெற்றுள்ள    அட்னானே   தலைவராக    நீடிக்க   வேண்டும்   என     விரும்புகிறோம்”,  என   இன்று   குவாந்தானில்   நடைபெற்ற    சிறப்புச்   செய்தியாளர்    கூட்டத்தில்  ஷகிருடின்   கூறினார்.

அட்னான்   சுமார்   18  ஆண்டுகளாக   பகாங்   மந்திரி   புசாராக    இருக்கிறார்.