விருது பெறுவோர் பின்னணியை ஆராய எம்ஏசிசி தயார்

macc மலேசிய     ஊழல்தடுப்பு    ஆணையம் (எம்ஏசிசி),   வருங்காலத்தில்    நாட்டில்  தகுதியானவர்களுக்கே     விருது   வழங்கப்படுவதை     உறுதி   செய்ய   விருது   பெறுவோரின்   பின்னணியை   ஆராய     தயாராகவுள்ளது.

இப்போது,   கேட்டுக்கொள்ளப்படும்  வேளைகளில்    மட்டுமே   அவர்களின்  பின்னணி  ஆராயப்படுகிறது  என   தலைமை   ஆணையர்   சுல்கிப்ளி   அஹமட்   கூறினார்.

“சம்பந்தப்பட்ட   தரப்புகள்   கேட்டுக்கொண்டால்   எல்லாருடைய   பின்னணிகளையும்   ஆராய்வோம்”,  என  காஜாங்கில்   செய்தியாளர்களிடம்   அவர்   தெரிவித்தார்.

‘டத்தோ’க்கள்  ‘டத்தோஸ்ரீ’கள்   போன்றோர்   இரகசிய   கும்பல்   நடவடிக்கைகளில்   ஈடுப்பட்டிருப்பதாக    அண்மையில்    செய்திகள்    வெளிவந்திருப்பது   குறித்து  சுல்கிப்ளி   கருத்துரைத்தார்.