ஜோங்-நாம் கொலையில் மேலும் ஒருவர் கைது

jong-namகிம்  ஜோங்-நாம்  கொலையில்   தொடர்புள்ளவர்   என்ற   சந்தேகத்தின்பேரில்    நான்காவது    நபர்   ஒருவரை   போலீசார்   கைது   செய்துள்ளனர்.

நேற்றிரவு   ஜாலான்   கூச்சாய்  லாமாவில்  ஒரு   கொண்டோமினியத்தில்    மேற்கொண்ட      அதிரடி   நடவடிக்கையின்போது       அந்நபர்  கைதானதாகத்   தெரிகிறது.

47-வயது   நிரம்பிய    அவர்   வட  கொரிய    கடப்பிதழ்   வைத்திருந்தார்   என   த  ஸ்டார்    அறிவித்தது.

அனைத்துலகக்   கவனத்தைப்  பெற்றுள்ள    இக்கொலைச்   சம்பவம்    தொடர்பில்    போலீஸ்    மேலும்    மூன்று   ஆடவர்களைத்   தேடி  வருகிறார்கள்.