விலை கண்காணிப்பு
பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா நாசிர் கூறுகையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைவடைந்துள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி வணிகர்கள் அதிக லாபம் ஈட்டுவதைத் தடுக்க, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் சந்தையை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றார்.
பெலுரான் தொகுதியின் ரொனால்ட் கியான்டீ எழுப்பிய, “எண்ணெய் விலை குறைந்ததால் போக்குவரத்து மற்றும் உணவுப் பொருட்கள் இறக்குமதி செலவுகள் குறைந்துள்ளதா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அக்மல், அரசின் மானியங்கள் நுகர்வோர்களை திடீர் விலை உயர்விலிருந்து பாதுகாத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், எரிசக்தி விலை குறைவது பொருட்களின் விலையும் குறைய வழிவகுக்க வேண்டும் என்றும், செயல்பாட்டு செலவுகள் குறைந்த பிறகும் வணிகர்கள் விலைகளை உயர்வாகவே வைத்திருக்காததை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“செயல்பாட்டு செலவுகள் ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ள நிலையில், வணிகர்கள் அதனைப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாததை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் நுகர்வோர்கள் தேவையற்ற சுமையைச் சுமக்க வேண்டிய நிலை ஏற்படாது,” என்று அவர் கூறினார்.
























