பத்துமலை சகோதரர்கள் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர்

Batumalaibrothershanged

பத்துமலை சகோதரர்கள் – ரமேஷ், 45, மற்றும் சுதர், 40, இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர்.

அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மீதான முடிவுக்காக இன்னும் காத்திருக்கையில் அவர்கள் தூக்கிலிடப்பட்டத்தை எம்னெஸ்டி இண்டர்நேசனல் மலேசியா (AIM) கடுமையாகச் சாடியுள்ளது.

இது கொடுமையானது. கைதிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தூக்கிலிடப்படுவார்கள். அதற்குத் தயாராகிக்கொள்ளும்படி அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னர், இப்போது அந்தத் தகவல் தவறானது என்று அறியப்பட்டுள்ளது என்று எம்னெஸ்டி இண்டர்நேசனல் மலேசியாவின் ஷாமினி தர்ஷினி கூறினார்.