பகோவில் முகைதினுக்கு பாஸ் மிரட்டலாக இல்லை

 

Pasisnothreattomuhyddinஜொகூரில் பாஸ் கட்சி இருப்பதால் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினுக்கு எவ்வித மிரட்டலுமில்லை. அவருடைய நாடாளுமன்ற தொகுதியிலும்கூட அது மிரட்டலாக இல்லை என்று ஜொகூர் அமனா தலைவர் அமினோல்ஹூடா ஹசான் கூறுகிறார்.

“நான் (முன்னதாக) முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜொகூர் பாஸ்சின் அமைப்பாளராக இருந்திருக்கிறேன். எனக்கு இங்கு கட்சியின் வலிமை குறித்து அதிகமாகவே தெரியும்”, என்று பாஸ் கட்சியின் மாநில முன்னாள் கமிஷனரான அமினோல்ஹூடா மலேசியாகினியிடம் கூறினார்.

இங்கு என்ன நடக்கிறது என்பது கைருடினைவிட ஜொகூர் மக்களுக்கு அதிகம் தெரியும் என்று கூறிய அமினோல்ஹூடா, ஜைருடின் திரங்கானுவில் இருக்கிறார். அவருக்கு பாஸ் ஜொகூரில் எவ்வளவு வலுமாக இருக்கிறது என்பது தெரியாது ஏனென்றால் அவருக்கு கட்சியின் வளர்ச்சி பற்றி எதுவுமே தெரியாது என்று மேலும் கூறினார்.

நேற்று, கோலா நெருஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கைருடின், அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முகைதினுக்கு பாஸ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் ஏனென்றால் சட்டம் 355 பல மலாய் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ளது என்று கூறியிருந்தார்.