எதிர்திசையில் வாகனத்தை ஓட்டிய பெண்ணுக்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

caseவடக்கு- தெற்கு   நெடுஞ்சாலையில்    போக்குவரத்துக்கு   எதிர்திசையில்   காரை ஒட்டிச்    சென்று    ஆடவர் ஒருவருக்கு மரணத்தை விளைவித்த   பதின்ம  வயது பெண்,     ஏற்கனவே      எம்பிடேமின்   போதைப்   பொருள்   உட்கொண்டிருந்ததாகக்  குற்றஞ்சாட்டப்பட்டிருந்த  நிலையில்      இன்று  புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், போதைப்பொருள்  உட்கொண்டு   காரோட்டியதாக   மேலும்   ஒரு   குற்றம்   அவர்மீது   சுமத்தப்பட்டது.

பகுதி நேரமாக மாடலிங் செய்யும்   அவர்மீது   1987ம் ஆண்டு   சாலை போக்குவரத்து சட்டம்   பிரிவு  44(1) (ஏ)-இன்கீழ் குற்றம்   சாட்டப்பட்டது.

ஆனால்,   19வயது   இங்  பெய்  வென்   குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்.

மாஜிஸ்திரேட்    ஜமாலியா   அப்ட்  மனாப்,  ரிம7,000  பிணையிலும்  இருவர்  உத்தரவாதத்தின்பேரிலும்   அவரை  விடுவித்தார்.