மகாதிர்: பாஸ் கட்சியின் நோக்கம் மலாய்க்காரர்களின் வாக்குகளை உடைப்பதாகும்

 

yrsaydevilweknowமலேசிய அரசியலில் ஒரு மூன்றாவது அணியை உருவாக்குவதற்கான பாஸின் முடிவு இறுதியில் மலாய்க்காரர்களின் வாக்குகளைச் சிதைத்து அம்னோவுக்கு வெற்றியைத் தருவதாகும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறினார்.

பாஸ் அம்னோவுடன் சேர்ந்துகொள்கிறதோ இல்லையோ, ஹரப்பானுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை குறைக்கும் என்பதோடு அதனுடைய வாக்குகளையும் இழக்கும் என்றாரவர்.

“ஹரப்பான் மற்றும் பாஸ் தோல்வி அடையும். பிஎன் வெற்றி பெறும். இதுதான் பாஸின் போராட்டம். அது இனத்திற்காகவோ சமயத்திற்காகவோ அல்ல.

“அவர்களின் நோக்கம் மலாய்க்காரர்களைப் பலவீனப்படுத்துவதாகும்”, என்று மகாதிர் அவரது வலைதளத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.