மரியா சின்னின் கார் ஜன்னல் உடைக்கப்பட்டது

 

Maria car windowsஇன்று தமது காரை ஓட்டிக்கொண்டு வரும்போது அக்காரின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது பற்றி பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா போலீஸ் புகார் செய்யவிருக்கிறார்.

பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அவரது அலுவலகத்திலிருந்து பெடரல் ஹைவேயிக்குள் திரும்பி கார் நகர்ந்து கொண்டிருக்கும் போது யாரோ ஒருவன் ஓட்டுநர் பக்கமுள்ள கண்ணாடியை உடைத்தான்.

காரை ஓட்டுவதில் கவனத்தைச் செலுத்தியதாலும், காரின் கண்ணாடி உடைந்து விட்டதாலும் யார் அல்லது எது கண்ணாடியை உடைத்தது என்பதை தம்மால் காண முடியவில்லை என்று மலேசியாகினி தொடர்பு கொண்ட போது அவர் கூறினார்.

இச்சம்பவக் குறித்து தாம் போலீஸ் புகார் செய்யப் போவதாக கூறிய மரியா, கடந்த சில நாட்களாக யார் என்று தெரியாத நபர்களிடமிருந்து தமக்கு செய்திகளும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்ததாக அவர் மேலும் கூறினார்.

அவரது மகனுக்கும் இம்மாதிரியான தொந்தரவுகள் ஏற்பட்டுள்ளன என்றும் மரியா கூறினார்.