மூத்த போலீஸ்காரரும் இதர இருவரும் எம்எசிசியால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

 

எசிபி என்ற தகுதியைக் கொண்ட ஒரு மூத்த போலீஸ் கமிஷனரையும் இரண்டு பெண்களையும் ஊழல் சம்பந்தமாக மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) தடுத்து வைத்துள்ளது.

பெர்னாமா தகவலின்படி, சந்தேகத்திற்குரிய அந்த முன்னாள் போலீஸ் தலைவரும் அவருடைய உறவினர்களாகக் கருதப்படும் இரண்டு பெண்களும் அடுத்த செவ்வாய்க்கிழமை வரையில் தடுத்து வைப்பதற்கான உத்தரவை ஈப்போவிலுள்ள மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கைவிலங்கிடப்பட்ட அம்மூவரும் நீதிமன்ற வளாகத்திற்கு இன்று காலை மணி 10.45 அளவில் கொண்டுவரப்பட்டனர்.