செய்திகள்டிசம்பர் 31, 2017 2018 புத்தாண்டு வாழ்த்து செம்பருத்தி.கோம் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துகள். செம்பருத்தி குடும்பத்தினர் Related posts பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்கும் சீன சமூகத்திற்கும்…புத்ராஜெயாவில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம்பாஸ் கட்சி, பெர்சத்துவுடன் உள்ள உறவுகள்…காரக் நெடுஞ்சாலை விபத்தில் பலியான மகன்…தளத்திற்குச் சென்று, சிறு வணிகர்களுக்கு கடன்…புதிய வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை…புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7…உயர்கல்வி நிறுவனங்களில் 169,803 எஸ்பிஎம் பள்ளி…ஜூன் 1 முதல் அமலுக்கு வரும்…18 மாதங்களுக்குப் பிறகும், மருத்துவ விசா…குழந்தைகளுக்கான இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த அரசு…சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: அதிகாரிகள்…மலேசிய GSF ஆர்வலர்கள் விடுதலை, ஞாயிற்றுக்கிழமைக்குள்…சுங்கை பட்டாணியில் ஹீலியம் எரிவாயு சிலிண்டர்…ஒற்றுமையையும் நிலைத்தன்மையையும் பாதுகாப்பதில் அரசாட்சி மிக…பெடரல் நெடுஞ்சாலை மோட்டார் சைக்கிள் பாதை…கோத்தா பாரு: குளியலறையில் ஆண் ஒருவர்…மலேசியா பனை எண்ணெய் அடிப்படையிலான எரிபொருள்…கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த…டீசல் விலை உயர்வால் கட்டுமானச் செலவுகள்…அரச ஆணைகள் வழிகாட்டுதலுக்காகவே தவிர அவை…பாண்டன் மற்றும் செத்தியாவங்சா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்…சரவாக் தனது சொந்த விண்வெளி ஆராய்ச்சி…பெண் இ-ஹெய்லிங் (மின்னணு அழைப்பு) ஓட்டுநரைக்…ஊடகங்களுக்கு எதிரான வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது…
புலனத்தின் வழி பெற்ற வாழ்த்து! இதோ.. வருகிறாள் 2018 என்னும் இங்கிலாந்து பெண்.. அரை ஆடை கலாச்சாரத்தை என் கிராமத்து பெண்ணுக்கும் கற்றுக்கொடுத்த ஆங்கிலேயத்து அரண்மணைக்காரி.. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இளமை மாறாமல்.. எங்களின் நாகரீகம் அழித்து.. எங்களின் வாழ்வியல் கலாச்சாரம் கலைத்து.. ஏ… புத்தாண்டே.. உன்மீது எனக்கு …ஒருபோதும் வருத்தமில்லை. ஏனெனில். என்று எங்களுக்கு தமிழ் மாதங்கள் மறந்து போனதோ.. திருவள்ளுவர் ஆண்டு தெரியாமல் போனதோ.. அப்போது வந்த வருத்தம் எங்கள்மீதும்.. எங்கள் தமிழ் இனத்தின் மீதும்.. வா.. உன்னையும் கொண்டாடுவோம்.. நாங்கள்.. ஏனெனில் நாங்கள் எங்களின் மொழி மறந்த மனிதர்கள்.. எங்களின் புத்தாண்டை மறந்தாலும்.. உன்னை வானவேடிக்கை இட்டு.. வரவேற்போம்.. ஆங்கில மோகம் கொண்ட அன்புத் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள். @@@@@@@@@@@@@@@@@@ எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..???? ———————* என் பேரு வில்லியம் இல்ல…. அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல… தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல… ’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல… தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல… படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல… ”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல… நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல…. பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில கேக்கை வெட்டி அரிதாரம் பூசி குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க… உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன் கலாச்சாரம் உனக்கு எதுக்குடா? அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?…. இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?…. இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..???? —பழ. தமிழார்வன்–
புலனத்தின் வழி பெற்ற வாழ்த்து!
இதோ..
வருகிறாள்
2018 என்னும்
இங்கிலாந்து
பெண்..
அரை ஆடை
கலாச்சாரத்தை
என்
கிராமத்து பெண்ணுக்கும்
கற்றுக்கொடுத்த
ஆங்கிலேயத்து
அரண்மணைக்காரி..
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு
மேலாகியும்
இன்னும்
இளமை மாறாமல்..
எங்களின்
நாகரீகம் அழித்து..
எங்களின் வாழ்வியல்
கலாச்சாரம்
கலைத்து..
ஏ…
புத்தாண்டே..
உன்மீது
எனக்கு …ஒருபோதும்
வருத்தமில்லை.
ஏனெனில்.
என்று எங்களுக்கு
தமிழ் மாதங்கள்
மறந்து போனதோ..
திருவள்ளுவர் ஆண்டு
தெரியாமல் போனதோ..
அப்போது வந்த
வருத்தம்
எங்கள்மீதும்..
எங்கள் தமிழ்
இனத்தின் மீதும்..
வா.. உன்னையும்
கொண்டாடுவோம்..
நாங்கள்..
ஏனெனில்
நாங்கள் எங்களின்
மொழி மறந்த
மனிதர்கள்..
எங்களின்
புத்தாண்டை
மறந்தாலும்..
உன்னை
வானவேடிக்கை
இட்டு..
வரவேற்போம்..
ஆங்கில மோகம்
கொண்ட
அன்புத் தமிழர்களுக்கு
வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@
எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
———————*
என் பேரு வில்லியம் இல்ல….
அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல…
தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல…
’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல…
தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல…
படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல…
”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல…
நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல….
பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில
கேக்கை வெட்டி அரிதாரம் பூசி
குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க…
உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன்
கலாச்சாரம் உனக்கு எதுக்குடா?
அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?….
இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?….
இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????
—பழ. தமிழார்வன்–
செம்பருத்தி வாசக நண்பர்கள் அனைவருக்கும் 2018 ஆம் புதிய ஆண்டு வாழ்த்துகள்…