பஹாங் மற்றும் ஜொகூரில் பலத்த காற்று, கடுமையான மழை

நாளை, பஹாங் மற்றும் ஜொகூரின் பல இடங்களில், பலத்த காற்றுடன் கூடிய, கடுமையான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய வானிலை இலாகா, பகாங் மாநிலத்தில் பெக்கான், ரொம்பின் மற்றும் ஜொகூரில் மெர்சிங் , செகாமாட் மாவட்டங்களை மோசமான வானிலை தாக்கும் என ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.

மேலும், பஹாங்கில் குவாந்தான், மாரான், பெரா, மற்றும் ஜொகூரில் குளுவாங்கிலும் மோசமான வானிலை என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரெங்கானுவில் கெமாமான், டுங்குன் மாவட்டம், நெகிரி செம்பிலானில் ஜெலபு, ஜெம்பூல், தம்பின், கோல பிலா , ரெம்பாவ் பகுதிகளில் மற்றும் மலாக்காவிலும் மோசமான வானிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாவில், நாளை தொடக்கம் புதன் வரையில், குடாட், சன்டகான் மற்றும் கோத்த பெலுட் & ரானாவ் மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய கனத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.