நஜிப் மேம்பாட்டைக் காட்டி கிளந்தானை வசீகரிக்க முயல்கிறார்

கிளந்தான்  மக்களிடம்  “Ambo Perdana Menteri untuk semua” (நான்  எல்லாருக்குமான  பிரதமர்)    என்று  கூறியதன்வழி       அவர்களின்  நலன்களுக்கு   கூட்டரசு  அரசாங்கத்தைத்   தாராளமாக   நம்பலாம்   என்ற     செய்தியைத்    தெரிவித்துக் கொண்டிருக்கிறார்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்.

ஒரு  நாள்  அலுவல்  பயணம்  மேற்கொண்டு   கிளந்தான்    சென்ற  நஜிப்,  மற்ற   மாநிலங்களுக்கு   இணையாக   கிளந்தானை   மேம்படுத்த    உறுதி  பூண்டிருப்பதாகச்   சொன்னார்.

நேற்று   தொடக்கிவைக்கப்பட்ட   சுங்கை   கிளந்தான்    மேம்பாட்டுத்   திட்டத்தை   அதற்கு  ஓர்  எடுத்துக்காட்டு   என்றாரவர்.  ரிம572 மில்லியன்  செலவில்    மேற்கொள்ளப்படும்    அத்திட்டம்   2014-இல்   நிகழ்ந்ததைப்  போன்ற  பெரிய  வெள்ளப்பெருக்கு  ஏற்படாமல்    தடுக்கும்.  அத்திட்டத்தால்   கிளந்தான்  ஆறு  நெடுகிலும்   வசிக்கும்   100,000  பேர்  பயனடைவர்.

அத்திட்டம்  2021-இல்    முழுமை  பெறும்   என  எதிர்பார்க்கப்படுகிறது.