அஸ்மின்: ஹரப்பான் தேர்தலில் வென்றால் அரசு ஊழியருக்கு மூன்று மாதத்துக்கும் கூடுதலான போனஸ்

சிலாங்கூர்   பராமரிப்பு  மந்திரி  புசார்   அஸ்மின்  அலி,   பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர்  பக்கத்தான்  ஹரப்பானே  மாநிலத்தைத்   தொடர்ந்து    நிர்வகித்தால்   அரசு  ஊழியர்கள்   மூன்று  மாதச் சம்பளத்துக்கும்  கூடுதலான  தொகையை  போனஸாகப்   பெறுவார்கள்     என்றார்.

“மூன்று  மாத  போனஸ்  என்பது   பெரிய  தொகை  இல்லைதான்.  ஆனாலும்  அது  நியாயமானது.  (அரசு  ஊழியர்களின்)  தகுதி,  அடைவுநிலை   ஆகியவற்றின்   அடிப்படையில்    மூன்று  மாதச்  சம்பளத்துக்கும்  கூடுதலான  தொகைகூட  (போனஸாக)    வழங்கப்படலாம்”,  என்றாரவர்.

கடந்த   ஆண்டு   மாநில  பட்ஜெட்டைத்   தாக்கல்   செய்தபோது   மாநில   அரசு  ஊழியர்களுக்கு  மூன்று  மாத போனஸ்  வழங்கப்படும்  என்றும்   அஸ்மின்   அறிவித்தார்.

இன்று,   ஷா  ஆலமில்   மாநில  அரசு   ஊழியர்களைப்   பாராட்டுவதற்காக   ஏற்பாடு   செய்யப்பட்டிருந்த   ஒரு   நிகழ்வில்    அஸ்மின்  பேசினார்.