அமிருடின் ஷாரி சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார்

சிலாங்கூர் மந்திரி பெசார் யார் என்ற ஊகங்களுக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது.
சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரி சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை மணி 10.15 க்கு, கிள்ளான் இஸ்தானா அலாம் ஷாவில் அவர் சிலாங்கூர் சுல்தானின் முன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அமிருடின் ஷாரி சிலாங்கூர் மாநில ஆட்சி மன்றத்தில் இளைஞர், விளையாட்டு, கலாச்சாரம் போன்றவற்றுக்கு பொறுப்பேற்றிருந்தார்.

அவர் காலை மணி 8.20 அளவில் இஸ்தானாவுக்கு அவரது துணவியார் மாஸ்டினா முகமட்டுடன் வந்து சேர்ந்தார்.