நஜிப்பின் ஊழல் வழக்கைப் பொதுவில் விவாதிப்பது விசாரணையைக் கெடுக்காது

மலேசியாவில் ஜூரிகள் முறை இல்லை என்பதால் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஊழல் வழக்கை பொதுவில் விவாதிப்பது அவரது வழக்கு விசாரணைக்குப் பாதகமாக அமையாது என்கிறார் இஸ்கண்டர் புத்ரி எம்பியின் அரசியல் செயலாளர் ஷியாரெட்சான் ஜொகன்.

நியாயமான விசாரணையைப் பெறும் உரிமை நஜிப்புக்கு உண்டு. அதேபோல் ஊடகங்களில் கருத்துச் சொல்லும் உரிமை மக்களுக்கு உண்டு.

“மலேசியா ஜூரர்முறையைப் பின்பற்றவில்லை என்பதால் ஊடகச் செய்திகளும் பொதுமக்கள் அது பற்றி விவாதிப்பதும் விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.