நஜிப் ரிம3.5மில்லியன் பிணைத் தொகையில் முதல் பகுதியைச் செலுத்தினார்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது பிணைத் தொகையின் முதல் பகுதியான ரிம 1மில்லியனைக் கட்டுவதற்கு இன்று கோலாலும்பூர் நீதிமன்ற வளாகம் வந்தார்.

தம் மகன் நோராஷ்மானுடன் வந்த அவர் பிணைத் தொகையைக் கட்டி பிணை தொடர்பான பல்வேறு ஆவணங்களிலும் கையெழுத்திட்டார். இதற்கு 8 நிமிடங்கள் ஆனது, அதன் பின்னர் அவர் மகனுடன் புறப்பட்டுச் சென்றார்.

புறப்படுவதற்குமுன் செய்தியாளர்களிடம் பேசிய நஜிப் பிணைத் தொகையின் முதல் பகுதியைச் செலுத்தியாயிற்று என்றார்.

“எஞ்சிய தொகையும் நீதிபதி நிர்ணயித்தப்படி கட்டம்கட்டமாக செலுத்தப்படும்”, என்றார்.

மீதத் தொகையை செப்டம்பர் 28-க்குள் அவர் கட்டி முடிக்க வேண்டும்.