ஊழல் தலைவர்களே கெளரவமாக வெளியேறுவீர்: அம்னோ இளைஞர் தலைவர் முழக்கம்

அம்னோ ஏஜிஎம்   அம்னோ இளைஞர் தலைவர் அஷிராப் வாஜ்டி டுசுக்கி, ஊழல் தொடர்புள்ள தலைவர்கள் கெளரவமாகக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

“எல்லா நிலைகளிலுமுள்ள அம்னோ தலைவர்களுக்கு அம்னோ இளைஞர்கள் ஒன்றை நினைவுறுத்த விழைகின்றனர்- ஊழலில் அவர்களுக்குத் தொடர்பிருந்தால் கெளரவமாக விலகிக் கொள்ள வேண்டும்.

“கட்சியைக்  கவசமாகப்  பயன்படுத்திக்கொள்ளாதீர்கள். தனிப்பட்ட உங்கள் ஊழலுக்குள் கட்சியை இழுக்காதீர்கள்”. இன்று காலை கோலாலும்பூரில் அம்னோ இளைஞர் பிரிவுக் கூட்டத்தைக் தொடக்கி வைத்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

ஆனால், அஷிராப் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

முன்னதாக, இளைஞர் தலைவர், 1எம்டிபி ஊழலில் தலைவர்களுக்கு இருந்த தொடர்புதான் மே 9 பொதுத் தேர்தலில் அம்னோவின் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்றார்.

1எம்டிபி தொடர்பில் அம்னோ முன்னாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்மீது 25 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.