பிடி-யில் மலாய் வாக்காளர்கள் வாக்களிக்கும் கடமையைத் தவறாமல் செய்ய வேண்டும்: அம்னோ வலியுறுத்து

போர்ட் டிக்சன் அம்னோ தலைவர் முகம்மட் பைசல் ரம்லி, அத்தொகுதியில் உள்ள மலாய் வாக்காளர்கள், அதிலும் குறிப்பாக அம்னோவின் 13,000 கட்சி உறுப்பினர்கள், வரும் சனிக்கிழமை அவசியம் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“நாங்கள் முன்பே கூறியுள்ளோம் போர்ட் டிக்சனில் வாக்காளராக பதிந்து கொண்டுள்ள எவரும் வாக்களிப்பதை அம்னோ/பிஎன் தடுக்கவில்லை என்று.

“அவர்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“எல்லா மலாய்க்காரர்களையும், குறிப்பாக அம்னோ உறுப்பினர்களை அவர்களின் கடமையைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.