ஐசெர்ட் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள 20 பேருந்துகள், ஷஹிடான் ஏற்பாடு

அரசாங்கம் ஐசெர்ட் மாநாட்டில் கையொப்பமிடாது என்று அறிவித்தும், அதனை எதிர்க்கும் சில தரப்பினர், எதிர்வரும் டிசம்பர் 8-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று, பெர்லிஸ் அம்னோ மூத்தத் தலைவர் ஷஹிடான் காசிம், அந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ள, மக்களைத் திரட்டவுள்ளதாக அறிவித்துள்ளார்.

“அம்னோவும் பாஸ்-உம் டிசம்பர் 8 பேரணியில் கலந்துகொள்ளும், 20 பேருந்துகளை நான் ஏற்பாடு செய்யவுள்ளேன். இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களுக்காக, நாட்டிற்காக நாங்கள் போகவுள்ளோம்,” என்று தனது முகநூலில் அவர் இன்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரணி பதட்டத்தை ஏற்படுத்தும் என சில தரப்பினர் கவலையடைந்துள்ள நிலையில், பெர்லிஸ் அம்னோ தொடர்பு குழுவின் முன்னாள் தலைவரான ஷாஹிடான் அதற்கு எதிர்மாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

“ஒற்றுமையையும் இன நல்லிணக்கத்தையும் வளர்க்கும் வகையில் அப்பேரணி அமைதியாக நடைபெறும்,” என்றார் அவர்.