முகைதின்: புதிய பூமிபுத்ரா திட்டம் எல்லா இனங்களின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும்

பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் மைய கொள்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்படுத்தப்படும் புதிய பூமிபுத்ரா திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகவும் எல்லா மலேசியருக்கும் நன்மை பயப்பயப்பதாகவும் இருத்தல் வேண்டும் என்று பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் கூறினார்.

“அக்கொள்கை பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்குமானால் அப்படிப்பட்ட பூமிபுத்ரா திட்டம் நமக்கு வேண்டாம்”, என்றவர் புத்ரா ஜெயா பெசத்து ஆண்டுக் கூட்டத்தில் கூறினார்.

ஹரப்பான் ஊழலையும் அதிகாரமீறல்களையும் எதிர்க்க உறுதி பூண்டிருப்பதாகக் கூறிய முகைதின், இக்கொள்கை நாட்டிலுள்ள மற்ற இனங்கள் முன்னேறவும் வெற்றிபெறவும் தடையாக இருக்காது என்றார்.

“நம் சமுதாயத்தில் எந்தவொரு தரப்பும் பின்தங்கிவிட இடமளிக்கப்படாது’”, என்றவர் வலியுறுத்தினார்.