ஒரு முழு தவணைக்கும் மகாதிர் பிரதமரா?

 

பெர்சத்து ஆண்டுப் பொது கூட்டம்: மகாதிர் ஒரு முமு தவணைக்கும் பிரதமராகத் தொடர வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் பொதுக் கூட்டத்தில் தெரிவித்திருந்த கருத்துகள் பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற முன்மொழிதல்கள் ஒன்றும் புதிதல்ல என்றும் இதுதான் அடிமட்ட உறிப்பினர்களின் விருப்பமாகும் என்று பெர்சத்துவின் இளைஞர் தலைவர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் கூறினார்.

ஆனாலும், இவ்விவகாரத்தில் மகாதிரின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.