எண்ணெய் விலை குறித்து அமைச்சரவை இன்னும் முடிவு செய்யவில்லை

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தலைமையில் நேற்று கூடிய வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோல் விலைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என நம்பப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

“அதன் தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”, எனத் தகவலறிந்த வட்டாரமொன்று மலேசியாகினியிடம் தெரிவித்தது.

மலேசியாகினி நிதி அமைச்சர் லிம் குவான் எங்கைத் தொடர்பு கொள்ள முனைந்துள்ளது..

லிம் டிசம்பர் 2018, டிசம்பர் 24-இல், இவ்வாண்டு தொடங்கி பெட்ரோல், டீசல் விலைகள் வாரா வாரம் கட்டுப்பாட்டுக்கு உள்பட்ட நிலையில் மிதக்க விடப்படும் என்று கூறியிருந்தார்.