தெரு கூட்டுபவருக்கு நெகிரி மாநில விருது

தெரு கூட்டுபவரான சான் முன் தை தனக்கு மாநில விருது கொடுக்கப்படும் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.

ஆனால், திங்கள்கிழமை(ஜனவரி 14) நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் புசார் துவாங்கு முக்ரிஸ் இப்னி அல்மர்கும் துவாங்கு முனாவிரின் 71வது பிறந்த நாள் விழாவை ஒட்டி கோலா பிலாவில் உள்ள இஸ்தானா புசார் ஸ்ரீமெனாந்தியில் அவருக்கு பிங்காட் ஜாசா கெபக்தியான் (பிஜேகே) விருதளித்து கெளரவிக்கப்பட்டது.

SWM என்வைரன்மெண்ட் சென். பெர்ஹாட்டில் சாலை துப்புரவு தொழிலாளராக பணியாற்றும் சான்,60, தன்னைப் போன்றவர்களுக்கும் மாநில விருதளிக்கப்படும் என்பதை என்றும் எதிர்பாத்ததில்லை.

அதற்காக, தான் பணியாற்றும் நிறுவனத்துக்கும் மாநில ஆட்சியாளர் துவாங்கு முக்ரிஸுக்கும் மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்தார்.

நான்கு பிள்ளைகளுக்குத் தாயான சான், இம்மாதம் நான்காம் நாள் பணி ஓய்வு பெற்று விட்டாலும் ஒப்பந்த அடிப்படையில் அவரது பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.

“சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் மீண்டும் வேலை செய்யத் தொடங்குவேன். என் வேலைக்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது ஒன்றும் கடினமான பணியல்ல”, என்றாரவர்.