செமிஞ்சே வேட்பாளராக ஓர் இளைஞரை நிறுத்தினால், பிஎன்–னுக்கு வாய்ப்புள்ளது

செமிஞ்சே இடைத்தேர்தல் | செமிஞ்சே இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானிடமிருந்து அச்சட்டமன்றத் தொகுதியைப் பாரிசானால் கைப்பற்ற முடியுமென சிலாங்கூர் அம்னோ இளைஞர் அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால், அது வேட்பாளர் தேர்வில் இருக்கிறது என அவ்வணியின் தலைவர் ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.

“பிஎன் வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது, இருப்பினும் அது வேட்பாளரைப் பொறுத்துள்ளது. பிஎன் இளைஞர்களிடையே, ஒரு புது முகத்தை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அந்த இளைஞர் செமிஞ்சே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஓர் உள்ளூர்வாசியாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

கடந்த ஜனவரி 18-ல், செமிஞ்சே இடைத்தேர்தல் எதிர்வரும் மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்தது.

வேட்பாளர் நியமனம் பிப்ரவரி 16-ல் நடைபெறும் என இசி தலைவர் அஸார் அஸிஸான் தெரிவித்தார்.