மரியா சின்னின் மகன் திருடர்களால் தாக்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயா எம்பி, மரியா சின் அப்துல்லாவின் மகன் ஒரு கொள்ளைச் சம்பவத்தின் போது திருடர்களால் கத்திக் குத்துக்கு ஆளானார்.

தாமான் புக்கிட் மாயாங் எமாஸ்-இல் அச்சம்பவம் நடந்ததாக தி ஸ்டார்  செய்தி வெளியிட்டுள்ளது.

யூனிவர்சிட்டி மலாயா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற, அவரின் மகன் தற்போது நலமாக இருப்பதாக அறியப்படுகிறது.

“என் மகன் நடந்து சென்றுக்கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த ஓர் ஆடவன் அவரைக் கீழே தள்ளி, கையில் குத்தி இருக்கிறான்,” என மரியா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அச்சமயம் அவ்வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளொட்டியப் பார்த்து, அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்,” என மரியா மேலும் சொன்னார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்டத் துணைக் காவல் அதிகாரி, சுப்ரீடெணன் கு மஸாரிமான், இன்று மாலை, 26 வயது நிரம்பிய ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.