கடப்பிதழை வைத்துக்கொள்ளும் தெங்கு அட்னான் முயற்சி நிராகரிக்கப்பட்டது

 

கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், தன்னுடைய கடப்பிதழைத் தன்னிடமே வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு செய்துகொண்ட மனுவை நிராகரித்தது.

அவரது மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி முகம்மட் நஸ்லான் முகம்மட் கசாலி செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநிறுத்தி தெங்கு அட்னான் ரிம500,000 பிணைப்பணம் கட்ட வேண்டும் என்றும் கடப்பிதழை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தெங்கு அட்னான் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர் தற்காலிகமாகக் கடப்பிதழைத் திரும்பப் பெற மனுச் செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.