குடிப்பதற்குத் தண்ணீர் தேவை- கெடா எம்பி-இடம் குடியிருப்பாளர்கள் கோரிக்கை

மற்றவர்களுக்கு இன்பம் பொங்கும் தீபாவளியாக இருக்கலாம் ஆனால், கெடா, பாடாங் செராய் அருகில் பாடாங் மெஹாவில் 70க்கு மேற்பட்ட குடும்பங்கள் தீபாவளியைத் குதூகலமாகக் கொண்டாடுவார்களா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. அவர்கள் செப்டம்பர் 25 தொடங்கிக் குழாய் நீர் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

வரவேண்டிய குடிநீர் சட்டவிரோதமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று அக்குடியிருப்பாளர்கள் கூறிக்கொள்கிறார்கள். ஏப்ரல் 4-இல் முறையீட்டு நீதிமன்றம் தங்களுக்கு ரிம4 மில்லியன் இழப்பீடு வழங்கியதற்குப் பழி வாங்கும் வகையில் அது செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரைக் குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக அவர்களின் வழக்குரைஞர் ரஞ்சன் சந்திரன் கூறினார்.