சைனல் கிளிங் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்

வெள்ளிக்கிழமை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்கு விசாரணைக்கு வருமாறு மலாய் தன்மான காங்கிரசின் தலைமை நிர்வாகச் செயலாளர் சைனல் கிளிங்-கை போலீஸ் அழைத்துள்ளது.

பினாங்கைச் சேர்ந்த யோகனாதன் லோகனாதன் தன்மானக் காங்கிரசுக்கு எதிராக செய்த போலீஸ் புகாரின் தொடர்பில் சைனல் கிளிங் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் புக்கிட் அமான் உயர் அதிகாரி எஸ்ஏசி மியோர் ஃபரிடாலாட்ராஷ் கூறினார்.

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சைனல் வருவார் என்றாரவர்.

“அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் வேறு யாரையெல்லாம் அழைக்கலாம் என்று பார்ப்போம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.