பதின்ம வயதினரிடையே தற்கொலை எண்ணங்கள் அதிகரிப்பு

2012க்கும் 2017க்குமிடையே மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு பதின்ம வயதினரிடையே தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் பெருகி வருவதைக் காட்டுகிறது என்கிறார் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சை.

“13க்கும் 17 வயதுக்கும் இடைப்பட்டவரிடையே மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் 2017-இல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அது 10 விழுக்காடாக இருந்தது. 2012-இல் அந்த எண்ணிக்கை 7.9 விழுக்காடாக இருந்தது”, என்று லீ இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.