இனப் பதற்றத்துக்குக் காரணம் அரசியல் தலைவர்களே- அன்வார் சாடல்

நாட்டில் இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்து வருவதற்கு அரசியல்வாதிகளே காரணம் என்று அன்வார் இப்ராகிம் இன்று கூறினார்.

அதிகரித்துவரும் பதற்றத்தைக் குறைக்க அரசாங்கம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிகேஆர் தலைவரும் போர்ட் டிக்சன் எம்பி-யுமான அன்வார் கேட்டுக்கொண்டார்.

“இப்பிரச்னைக்குக் காரணம் அரசியல் தலைவர்கள்தாம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் அவர்களுக்காக ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வது அவசியம்”, என்றாரவர்.

அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் இனவாத கருத்துகள் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவர்கள் பாட்டுக்கு பேசிவிட்டுப் போய்விடுவார்கள், இறுதியில் பாதிக்கப்படுவது மக்கள்தாம் என்றாரவர்.