நான் இப்போது பிஎன்னில் இல்லை: வாக்காளர்களுக்கு மகாதிர் நினைவூட்டல்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தாம் இன்னுமும் எதிர்க்கட்சியான பிஎன்னின் தலைவர்தான் என்று எண்ணி மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினார்.

பிஎன் தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் பல பொய்களை உரைத்து மக்களைக் குழப்ப முயல்வதாக அவர் கூறினார்.

“நீலநிற ஆடை உடுத்தி நான் பிரதமர் அத்துடன் அம்னோ மற்றும் பிஎன் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் படம் அப்படிப்பட்ட பொய்களில் ஒன்று. நான் இப்போது அம்னோ தலைவரும் இல்லை, பிஎன் தலைவருமில்லை.

“நான் ஹரப்பான் அரசாங்கத்தின் பிரதமர். சிலர் நான் இன்னமும் அம்னோ தலைவராக இருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இப்போது ஹரப்பான் தலைவர். அதன் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்”, என்று மகாதிர் இன்று காலை பெக்கான் நன்னாஸில் என்ஜிஓ ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கூறினார். .