‘பிரதமர் பதவி விலகுவார்’ என்பது பொய்யான செய்தி- பிஎம்ஓ அதிகாரி

பிரதமர் துறை அலுவலக (பிஎம்ஓ) அதிகாரி ஒருவர், சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் டாக்டர் மகாதிர் விரைவில் தம் பதவி விலகலை அறிவிப்பார் என்ற செய்தியை மறுத்துள்ளார்.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அப்படி ஒரு செய்தி பரவி வருகிறது.

“அது ஒரு பொய்யான செய்தி”, என்று அந்த அதிகாரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

மகாதிர் தம் பதவி விலகலை அறிவிக்கத் திட்டமிட்டிருப்பதால், ஊடகங்கள் அது தொடர்பாக அவரை அணுகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பணிக்கப்பட்டுள்ளதாகவும் மகாதிர் வெளிநாடு சென்று விட்டதாகவும் அச் செய்தி கூறிற்று.

மகாதிர் இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் 1963ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தம்மீதான கூட்டமொன்றில் கலந்து கொண்டார் என அவ்வதிகாரி கூறினார்.

“அவர் வெளிநாடு செல்லவில்லை”, என்றாரவர்.